Saturday, March 8, 2014

மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014

மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014
(08.03.2014  5.25pm.)
 
பெண்களை போற்றிடுவோம் - எந்நாளும்
பெண்களை போற்றிடுவோம்
கண் இமையாய் நம்மை காத்திட்ட தாயாய்
பெண்களை போற்றிடுவோம்

உண்ணாதிருந்தே உணவிடு வாளே
தூங்காதிருந்தே தூங்கிடச் செய்வாள்
தாங்கியே துயரை ஏங்கியே அழுவாள்
நீங்காதிருப்பாள் நம் மனத்தோடே (பெண்களை . . .)

உடன் பிறந்தவளே ஊக்கம் அளிப்பாள்
படும் துயர் கண்டு  பதறிடு வாளே
உடும்புப் பிடியாய் உள்மனம் புகுந்தே
தடுத்தாட்கொண்டே  தைரியம் அளிப்பாள் (பெண்களை . . .)

தோழியாய் இருந்தே துணை நிற்பாளே
விழி பார்த்தவளே வழி உரைத்திடுவாள்
சோழியாய் சிதறும் மனதை மாற்றி
வழி காட்டிடுவாள் வாழ்வில் வளர (பெண்களை . . .)

துணையாய் வந்திடும் நிழல் போல் அவளே
மனைவியை வந்து துணை நிற்பாளே
மனை சிறந்திடவே  தன மனை  மறப்பாள்
துணையாய் வருவாள் தூக்கத்தில் கூட (பெண்களை . . .)

(செந்தமிழ் தேன் மொழியாள்- மெட்டில் பாடிப் பார்க்கவும்)
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.