Wednesday, March 16, 2011

பங்குனி உத்திரம் - 19-03-2011

பங்குனி உத்திரம்       12-வது மாதமான பங்குனியில்,12-வது நட்சத்திரமான இந்த  உத்திர தினம் பன்னிரு கை வேலவனுக்கு மிகவும் உகந்த நாள். எல்லா முருகன் கோயில்களும் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் மிகப் பெரிய விழாவாக இத்திருநாள் கொண்டாடப்படும். பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும்,அலகு குத்தியும்,பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவார்கள். வாளமர் கோட்டையில் காவடி திருவிழா விசேஷமாக நடக்கும்.


 சிவபெருமான், பார்வதியின் திருமணம் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரமாகும். தன் தாய், தந்தையருக்கு திருமணம் நிகழ்ந்த நாளில், அவர்களைத் தரிசிக்க முருகப்பெருமான் வருவார். இதனால், இந்நாள் சிவவழிபாட்டிற்கும், அவரது அம்சமான முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கலாம். சிவன், பெருமாளின் பிள்ளையாக ஐயப்பன் அவதரித்த நாளும் இதுவே. இந்நாளில் சாஸ்தா, ஐயப்பன் கோயில்களில் விசேஷ வழிபாடுகளுடன் விழா நடக்கும்.
 ராமபிரான், சீதையின் திருமணம் நிகழ்ந்த நாளும் இதுவே ஆகும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தாயாரின், அவதார தின விழாவும் இந்நாளிலேயே நடக்கும்.
மனிதனாய் பிறந்த கிருஷ்ண பரமாத்மா, லட்சுமியான சீதாதேவியை ராமன் என்ற பெயர் ஏற்று திருமணம் செய்து கொண்டார். இந்த இனிய திருமணமும் இன்றே நிகழ்ந்தது. பார்வதிதேவி மீனாட்சி என்ற பெயரில் பூமியில் பிறந்து, தன் பக்தியால் இறைவனை மணமகனாக அடைந்தாள். அந்த இனிய நாளும் பங்குனி உத்திர நன்னாள்தான்.

இவையெல்லாம் கூட பங்குனி உத்திரத்தின்போது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால், தேவலோகத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் இதே நாளில் நடந்ததாகக் கருதப்பட்டு, முருகன் கோயில்களில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. மனிதனாய் பிறப்பவன் தெய்வ நிலைக்கு உயர வேண்டும். அவன் இறைவனுக்குரிய கல்யாண குணங்களுடன் வாழ வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது. கிராமங்களில் சாஸ்தாவின் அம்சமான அய்யனாருக்கு விழா எடுக்கப்படுகிறது.

வழிபடும் முறை:

 பங்குனி உத்திரத்தன்று பகலில் ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருந்து, முருகனை வேண்டி விரதமிருந்து மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்யலாம். தவிர, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி, தாயாரையும், ஐயப்பன் மற்றும் கிராமதேவதையாக உள்ள சாஸ்தா கோயில்களுக்கும் சென்று வரலாம்.

பலன்:


மனமுருக பிரார்த்தித்தால் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதே இந்த அனைத்து வழிபாடுகளின் தாத்பர்யமாக இருக்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி உத்திர தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதும்,இல்லாதவர்களுக்கு தான,தர்மங்கள்,அன்னதான்ம் செய்வது,தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வதும் மிகவும் விசேஷமாக கூற்ப்படுகிற்து.அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து,நற்செயல்கள் செய்வது எல்லா தடைகள்,தடங்கல்கள், துன்பங்கள்,இடர்ப்பாடுகளை நீக்கி வாழ்வில் வளமும் நலமும் சேர்த்து சகல ஜஸ்வர்யங்களையும் தரும்.

 பங்குனி உத்திர விரதம் இருப்பதால் திருமணத்தடை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். சிறந்த குழந்தைகள் பிறப்பர்.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர். அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
அதாவது பார்வதி – பரமேஸ்வரன், தெய்வயானை – முருகன், ஆண்டாள் – ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது. வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

http://www.tamilhindu.net/t706-topic

http://groups.google.com/group/palsuvai/browse_thread/thread/e58a00e9b006b377

No comments:

Post a Comment