Friday, October 28, 2011

ஓதி மலை முருகனின் அற்புதம்

“ஓதி மலை முருகனின் அற்புதம்”

  
 சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம் ஓதி மலை, இங்கே முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் இருக்காது, இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே. கோவில் 1650+100 செங்குத்தான படிக்கட்டுகளை கொண்டது, நகரத்து வயதானவர்கள் ஏற முடியாது, வயது குறைந்தவர்களே இதில் ஏற திணறி விடுவார்கள், உண்மையிலேயே மிக சிரமம் முதல் முறை எங்கும் உட்காராமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் நாக்கு தள்ளி முக்கால்வாசி முக்கி முக்கி போயும் வேறு வழி இல்லாமல் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சம் மறந்து பின்னால் சாய்ந்தாலும் பல்டி போட்டு விடுவோம், அவ்வளோ செங்குத்தான பகுதி. மிகைப்படுத்தி கூறவில்லை. நான் சபரி மலை சென்ற போது கூட இவ்வளோ சிரம படவில்லை. இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும்,வாகன பாதை கிடையாது.
கோவில் மிக எளிமையாக இருக்கும்,எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல். இந்த கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் (படி ஏறி படி ஏறி திடமாக இருக்கிறார்) ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார். அவர் எப்படி தான் ஏறி போய் பூசை செய்கிறாரோ !! நினைத்தாலே கண்ணை கட்டுது.எந்த வித ஆடம்பர அலங்காரமும் இல்லாமல் எளிமையான முருகன் சிலை, பார்க்கவே அற்புதம். இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது. கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும் மேலே வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
விசயத்துக்கு வருகிறேன், என்னுடைய அக்கா இந்த கோவில் முருகன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள், இங்கே சென்று வேண்டினால் நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பிக்கை, அதை உண்மை ஆக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன, எனவே எனக்கும் மிக ஆச்சர்யம். நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன். கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. நடந்த ஒரு சில விஷயங்கள் என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
என் அக்காவின் கணவர் உறவினர் 4 பேருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கும் இந்த கோவில் சென்ற வந்த பிறகு குழந்தை பிறந்தது (நீண்ட காலமாக குழந்தை இல்லாமல்) மூவரின் நிலை எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் உண்மை. எனக்கு தெரிந்த மீதி இருவர் பற்றி கூறுகிறேன்
ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, பல மருத்துவர்களிடம் காண்பித்து விட்டார்கள் மருத்துவர்களும் ஆணின் விந்தணுவில் சரியான அளவு உயிரணு இல்லை,எனவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார்கள், திருமணம் ஆகி 5 வருடம் ஆகி விட்டது. அனைவரும் கை விட்ட பிறகு அனைவருக்கும் நினைவு வருவது கடவுள் தானே. எனவே என் அக்காவின் விருப்பத்திற்காக இதையும் முயற்சி பண்ணலாமே என்று அவர்கள் கோவில் சென்று முருகனை வேண்டி வந்தார்கள், அடுத்த மாதமே அவர்கள் கருவுற்றார்கள், தற்போது குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள். இது நம்பவே முடியாத அதிசயம்.
இன்னொரு தம்பதி எனக்கு மிக நெருங்கிய உறவினர் திருமணம் ஆகி 20 வருடம் ஆகி விட்டது ஒரு முறை கருத்தரித்து அழிந்து விட்டது. பிறகு கருவுறவே இல்லை, அவரின் (ஆணின்) விந்தணுவில் உயிரணு இல்லை என்று கூறி விட்டார்கள். இவரும் இந்த கோவில் வந்து வேண்டி கொண்டார், இதற்காக பல விரதங்கள் பல வேண்டுதல்கள் என்று பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பிறகு என் அக்காவின் ஆலோசனை படி (என் அக்கா மருத்துவர்) சென்னை கமலா மருத்தவரிடம் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் தற்போது கருத்தரித்துள்ளார்கள்.
இது அறிவியல் தான் இங்கே எங்கே கடவுள் வந்தார் என்றால் என்னிடம் பதில் இல்லை. 20 வருடம் குழந்தை இல்லாமல் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி பல நாட்கள் அழுது, மற்றவர்களின் பேச்சுகளை சமாளித்து இந்த நிலையை அடைந்தவர்களிடம் போய் இது கடவுள் செயல் அல்ல அறிவியல் என்று கூறினால் நம்மை அவர் என்ன கூறுவார் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. வெளியே இருந்து கூறுகிறவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். தற்போது கருவுற்று இருக்கிறார்கள், இன்னும் குழந்தை பிறக்கவில்லை, அவர்கள் நலமுடன் குழந்தை பெற அந்த முருகன் ஆசிவர்த்திப்பானாக (Updated: இவருக்கு குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள்).
இன்னொரு பெண், இவருக்கு திருமணமே ஆகவில்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வரன் கிடைக்கவில்லை. என் திருமணத்திற்கு முன்பு இருந்து பார்க்கிறார்கள். தற்போது என் அக்கா கோவிலுக்கு சென்று வர கூறி, போய் வந்த பிறகு தற்போது நல்ல இடத்தில் வரன் கிடைத்துள்ளது.
கோவிலுக்கு போகாமல் இருந்தால் கடவுள் வரன் கொடுக்க வில்லை என்றால், அது என்ன கடவுள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. திருமணம் ஆகாமல் தள்ளி போவது எவ்வளோ பெரிய கொடுமை என்று அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அதுவும் குறிப்பாக பெண்கள். அந்த நிலையில் இருப்பவர்கள் கடவுளிடம் உன்னை தேடி வந்தால் தான் கொடுப்பாயா என்றெல்லாம் கேக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.
நான் மூன்று முறை இதோடு சென்று வந்துள்ளேன் எனக்கும் பல நன்மைகள் நடந்ததாகவே கருதுகிறேன். என் பகுதியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் கூறினேன் என்றால் இதை போல கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள், பல முயற்சிகளை செய்து இருப்பார்கள், கடைசியாக இதையும் ஏன் முடிந்தால் முயற்சித்து பார்க்க கூடாது, நல்லது நடக்கவில்லை என்றாலும், கெட்டது நடக்க வாய்ப்பில்லையே. நம்பிக்கையோடு எதை செய்தாலும் அதற்க்கு பலன் உண்டு, அது கடவுளுக்கு எனும் போது கொஞ்சம் கூடுதல் சக்தி இருப்பதாகவே உணருகிறேன்.
கடவுள் நம்பிக்கை பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது நமது பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான். “நான்கு பக்கமும் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்”
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மலையின் ஆரம்பம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)
 ஓதி மலை முருகனின் அற்புதம்
சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
உயரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கோவிலை அடைந்த பிறகு கோவிலின் முகப்பு பகுதி
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கடைசி 100 படிக்கட்டு இங்கே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கோபுரம் மட்டுமே எடுத்தேன்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் தெரிவது பவானி சாகர் அணையின் தண்ணீர்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மேக மூட்டம் ஒரு சில இடங்களில் இருப்பது மேலே இருந்து பார்க்கும் போது அழகாக தெரிந்தது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
வெய்யில் நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல் ஏற இறங்க முடியாது, ஒரு முறை என் அக்கா இருவர் கோவிலுக்கு போகும் போது வெய்யில் இல்லாததால் செருப்பு போடாமல் சென்று விட்டு வரும் போது வெய்யில் கொளுத்தி, நடக்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது தனி கதை. கருங்கல் என்பதால் சூடு தாறுமாறாக இருக்கும்.
ஓதி மலை (முடிந்தால்) செல்க முருகன் அருள் பெருக

For more

For more details (about how to go there etc.) contact  madambakkam Shivakumar Swamigal at 94440 80 490.

No comments:

Post a Comment